Tuesday, September 14, 2010

ஸ்பெயினின் ரபெல் நடால், முதன் முறையாக கோப்பை வென்று அசத்தினார் (யு.எஸ்., ஓபன் டென்னிஸ்)

நியூயார்க்:யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரபெல் நடால், முதன் முறையாக கோப்பை வென்று அசத்தினார். தவிர, நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற ஏழாவது வீரர் என்ற புதிய சாதனையும் படைத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பைனலுக்கு உலகின் "நம்பர்-1' வீரர் நடால், தரவரிசையில் 3வது இடத்திலிருக்கும் செர்பியாவின் டோகோவிச் இருவரும் முதன் முறையாக முன்னேறி இருந்தனர். மழை காரணமாக பைனல் ஒருநாள் தாமதமாக நடந்தது.
 

முதல் செட்டை நடால் 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் எழுச்சி கண்ட டோகோவிச், 7-4 என வென்று பதிலடி கொடுத்தார். ஆனால் மூன்றாவது செட்டை மீண்டும் நடால் 6-4 என வென்றார். தொடர்ந்து நடந்த நான்காவது செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-2 என எளிதாக தனதாக்கினார். இறுதியில் நடால் 6-4, 5-7, 6-4, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபன் பட்டத்தை முதன் முறையாக கைப்பற்றினார். இவர், ஆஸ்திரேலிய ஓபன் (2009), விம்பிள்டன் (2008, 2010) மற்றும் பிரெஞ்ச் ஓபன் (2005, 2006, 2007, 2008, 2010) என மொத்தம் 9 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
தவிர, நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஏழாவது வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன், பிரட் பெர்ரி (இங்கி.,), லாவர், ராய் எமர்சன் (ஆஸி.,), டன் பட்ஜ், அகாசி (அமெரிக்கா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகிய 6 வீரர்கள் நான்கு பட்டங்களையும் வென்றுள்ளனர். இளம் வயதில் நான்கு கோப்பை வெல்லும் 3வது வீரர் என்ற மற்றொரு சாதனையையும் நடால் (24) படைத்தார்.

இதுகுறித்து நடால் கூறியது:யு.எஸ்., ஓபன் தொடரில் கோப்பை வெல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவு. பைனலில் நான் எதிர்கொண்ட டோகோவிச் எப்போதும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துவார். இவருக்கு எதிராக நான் பலமுறை தோல்வியடைந்துள்ளேன். இந்நிலையில் அவரை வென்றுள்ளேன். எனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த போட்டியில் தான் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். கடந்த ஆண்டு மோசமாக அமைந்த எனக்கு, இந்த ஆண்டு சிறப்பாக இருந்தது. இதேநிலை எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன்.
இவ்வாறு நடால் கூறினார்.

Sunday, September 12, 2010

பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா இன்று காலமானார்


பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா இன்று காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஸ்வர்ணலதா (37). இவர் 1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.

எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 1990ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா... தேரோட்டமா... பாடல்தான் இவரை பிரபலபடுத்தியது. அதேபோல அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்... பாடல் ஸ்வர்ணலதாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இப்பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பஞ்சாபி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கும் ஸ்வர்ணலதாவின் குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஸ்வர்ணலதாவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வர்ணலதாவின் ஹிட்ஸ்களில் சில...

ஆட்டமா தேரோட்டமா (கேப்டன் பிரபாகரன்)
போவோமா ஊர்கோலம் (சின்ன தம்பி)
மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)
அடி ராக்கம்ம கையத் தட்டு (தளபதி)
அந்தியில வானம் (சின்னவர்)
உசிலம்பட்டி பெண்குட்டி (‌ஜென்டில் மேன்)
மலைக்கோயில் வாசலிலே... (வீரா)
மாடத்திலே கன்னி மாடத்திலே (வீரா)
என்னுள்ளே.. என்னுள்ளே (வள்ளி)
உளுந்து விதைக்கையிலே... (முதல்வன்)
எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலைபாயுதே)
முக்காலா முக்காபுலா (காதலன்)
பூங்காற்றிலே உன் சுவாசத்தில்... (உயிரே)
அக்கடா நாங்க (இந்தியன்)
அன்புள்ள மன்னவனே (மேட்டுக்குடி)
குச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்)
மெல்லிசையே... (மிஸ்டர் ரோமியோ)
கட்ட கட்ட நாட்டு கட்ட (ஜெமினி)
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா (உடன்பிறப்பு)
ஒரு பொய்யாவது சொல் கண்ணே (ஜோடி)
அஞ்சாதே ஜீவா (ஜோடி)
காதலெனும் தேர்வெழுதி... (காதலர் தினம்)
முத்தே முத்தம்மா... (உல்லாசம்)
மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் (மே மாசம்)..

யாழ்.குடாநாட்டின் அபிவிருத்தி தொடர்பான அரச கூட்டங்களில் கூட்டமைப்பு பங்கு பற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

2010-09-12 07:26:07   
குடாநாட்டின் அபிவிருத்தி மற்றும் மீள் குடியமர்வு தொடர்பான விவகாரங்கள் குறித்து அரசாங்கம் நடத்தும் கூட்டங் களில் பங்கேற்பது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்ந்திரன்.


யாழ்ப்பாணம்,செப்.12
குடாநாட்டின் அபிவிருத்தி மற்றும் மீள் குடியமர்வு தொடர்பான விவகாரங்கள் குறித்து அரசாங்கம் நடத்தும் கூட்டங் களில் பங்கேற்பது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித் தார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று யாழ்.செயலகத்தில் நடத்தவுள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்று இன்றைய கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளவிருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தாமும் பங்குபற்ற விருப்பதாக கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
எதிர்வரும் புதன்கிழமை நடைபெற வுள்ள மாவட்ட அபிவிருத்தி மற்றும் மீள் குடியமர்வு மீளாய்வுக் கூட்டத்தில் பங்கு பற்றுவீர்களா என சுரேஷ் பிரேமச்சந்திரனி டம் கேட்டபோது
கொழும்பில் கடந்த மாத இறுதியில்  நடைபெற்ற சந்திப்பில் பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ செப் ரெம்பர் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்து எமது உறுப்பினர்களுடன் மீள்குடியமர்வு குறித்து ஆராய்வதெனவும்
அதன் பின்னர் வலி.வடக்கில்  மீளக் குடியமர்த்தப்படும் இடங்களை நேரில் பார்வையிடுவது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அந்தக் கூட்டம் ஒத்திவைக் கப்பட்டதாக திடீரென அறிவிக்கப்பட்டது.
அதே கூட்டம் மீண்டும் யாழ்ப்பாணத் தில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை.
அழைப்புக் கிடைத்தால் கூட்டத்தில் பங்குபற்றுவோம்  என்றார் சுரேஷ் பிரே மச்சந்திரன்.     
ஃஃஃஃஃஃஃஉதயன் செய்தியை மேற்கோள்காட்டி இச்செய்தி இடப்படுகின்றதுஃஃஃஃஃஃஃஃஃஃஃ